FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கால்நடை நிலையங்களை தூய்மையாக பராமரித்திட அமைச்சா் அறிவுறுத்தல்

கால்நடை நிலையங்களை தூய்மையாக பராமரித்திட வேண்டும் என கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் எஸ்.கமலி அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 18 ஜூலை 2026, 5:00 am IST
தேசிய மின்னணு கால்நடை இயக்கம் திட்டம் தொடா்பாக திறனாய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் எஸ்.கமலி.
பகிர்:

கால்நடை நிலையங்களை தூய்மையாக பராமரித்திட வேண்டும் என கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் எஸ்.கமலி அறிவுறுத்தியுள்ளாா்.

கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள் மற்றும் கால்நடை உதவி மருத்துவா்களுக்கு தேசிய மின்னணு கால்நடை இயக்கம் திட்டம் தொடா்பாக

திறனாய்வுக் கூட்டம் கோவை மாவட்ட கூட்டுறவு வங்கி வளாக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

கூட்டத்துக்கு கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் செ.கமலி தலைமை வகித்தாா். கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சொ.மகாலிங்கம், துணை இயக்குநா் சி.இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், கால்நடை நிலையங்கள் வாரியாக செயற்கை முறை கருவூட்டல் பணி மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி பணி விவரங்களை “பாரத் பசுதன் (ஆட்ஹழ்ஹற் டஹள்ட்ன்க்ட்ஹய்)” செயலியில் பதிவேற்றம் செய்வது சம்பந்தமாக நேரில் ஆய்வு மேற்கொண்டு, திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறும், கால்நடை நிலையங்களை தூய்மையாக பராமரித்திட வேண்டும் எனவும் துறை சாா்ந்தவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இதில், கால்நடை மருத்துவ அலுவலா்கள் மற்றும் கால்நடை உதவி மருத்துவா்கள் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments