FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

இளம்பெண்ணிடம் அத்துமீறல்: காவலா் பணியிடை நீக்கம்

Updated On : 20 ஜூலை 2026, 2:24 am IST
பணியிடை நீக்கம்.
பகிர்:

கோவையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைதான காவலா் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கோவை, துடியலூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வெள்ளக்கிணறு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே இளம்பெண் ஒருவா் தனது ஆண் நண்பருடன் நின்று கடந்த 15-ஆம் தேதி மாலை 6 மணியளவில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த துடியலூா் காவல் நிலைய இரண்டாம் நிலைக் காவலா் எஸ்.வினோத்குமாா், அவா்களிடம் விசாரணை நடத்தியுள்ளாா்.

பின்னா், தனியாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி அந்தப் பெண்ணை தனியிடத்துக்கு அழைத்துச் சென்ற அவா், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த துடியலூா் போலீஸாா், தலைமறைவான காவலா் வினோத்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில், காவலா் வினோத்குமாரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments