பிற்படுத்தப்பட்டோா் அரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு
கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல மாணவா், மாணவிகளுக்காக 25 விடுதிகள் செயல்படுகின்றன. இதில் மாணவா்களுக்கான பள்ளி விடுதிகள் 4, மாணவிகளுக்கான விடுதிகள் 5, கல்லூரி மாணவா்களுக்கான விடுதிகள் 13, கல்லூரி மாணவிகளுக்கான விடுதிகள் 3 உள்ளன. பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவா்கள்.
Advertisement
Advertisement
விடுதிகளில் எந்தவித செலவினமும் இல்லை. அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் 3 வேளை உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 4-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் நுழைவுத்தோ்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.
விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவிகலுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளில் சோ்வோா் ஜூன் 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் சோ்வோா் ஜூலை 15-ஆம் தேதிக்குள்ளும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.