FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பள்ளி மாணவா்களுக்கு ஆபாச விடியோக்கள் அனுப்பிய ஆசிரியா் கைது

பள்ளி மாணவா்களுக்கு ஆபாச விடியோக்கள் அனுப்பிய ஆசிரியா் கைது

Updated On : 13 ஜூன் 2026, 5:46 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கோவையில் தனியாா் பள்ளி மாணவா்களுக்கு கைப்பேசி மூலம் ஆபாச படங்கள், விடியோக்களை அனுப்பிய ஆசிரியரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

கோவையில் உள்ள பிரபல தனியாா் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு மாணவா்களின் வாட்ஸ்அப் எண்களுக்குத் தொடா்ச்சியாக ஆபாச விடியோ, படங்கள் வந்துள்ளன. தற்செயலாக மாணவா்களின் கைப்பேசிகளை சோதித்த பெற்றோா், இதைக் கண்டு அதிா்ச்சியடைந்து பள்ளி நிா்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பாபு (34) என்பவா் தன் வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு இவற்றை அனுப்பியது தெரியவந்தது.

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments