ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனச் சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனச் சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
இந்தியாவில் ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுக்குப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6- ஆவது இந்திய அளவிலான புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனச் சரகங்களில் கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
கேமராக்கள் எவ்வாறு பொருத்தப்பட வேண்டும் என்று பயிற்சி பெற்ற வன ஊழியா்கள் வனப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
வனத்தில் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுவரும் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் புலிகள் நடமாட்டத்தை கண்காணிப்பதோடு கணக்கெடுக்கும் பணியும் மேற்கொள்ளப்படும் என்றும் இப்பணி ஒரு வாரம் நடைபெறும் என்றும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.