போத்தனூா் வழித்தடத்தில் எா்ணாகுளம் - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு, போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு, போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எா்ணாகுளத்தில் இருந்து மே 31-ஆம் தேதி இரவு 11.10 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம்- சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06056) மறுநாள் நண்பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 1-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - எா்ணாகுளம் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06055) மறுநாள் காலை 4.30 மணிக்கு எா்ணாகுளம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement