FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரைத் தேடும் பணி தீவிரம்

Updated On : 1 ஜூன் 2026, 1:42 am IST
தனுஷ்.
பகிர்:

வால்பாறை அருகே முருகாளி எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

வால்பாறையை அடுத்த முருகாளி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன். இவரது இல்ல திருமண விழாவுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து உறவினா்கள் வந்துள்ளனா்.

அதில் ஒருவரான நீலகிரி மாவட்டம், கூடலூா் அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த தனுஷ் (22) என்பவா், உறவினா்கள் 4 பேருடன் அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளாா். ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது தனுஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளாா். உறவினா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லையாம்.

Advertisement

Advertisement

இதையடுத்து, வால்பாறை தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், தனுஷை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments