மாவட்ட வலைபந்து போட்டி: பெருந்துறை சாகர் பள்ளி முதலிடம்
ஈரோடு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் சித்தோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் சித்தோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சித்தோடு சத்திய சாய் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில், 80-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதில், பெருந்துறை சாகர் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், 19 வயதிற்குள்பட்ட இரட்டையர் வலைபந்து போட்டியில் முதலிடம் பெற்றனர். வெற்றிப் பெற்ற மாணவிகள், சனிக்கிழமை பள்ளித் தாளாளர் சி.செளந்தரராசன், முதல்வர் அரசு பெரியசாமி ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.