காவல் துறை சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம்
நம்பியூரில் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நம்பியூரில் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நம்பியூர் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் லிங்கராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ராஜாமாணிக்கம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், நம்பியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான குருமந்தூர், மலையப்பாளையம், வேமாண்டம்பாளையம், சாவக்கட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில், நம்பியூர் காவல் ஆய்வாளர் மகாலிங்கம் கலந்து கொண்டு, சி.சி.டி.வி. காமிரா பொருத்துவது, சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.