மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்க அலுவலகம் திறப்பு
ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்க அலுவலகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்க அலுவலகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத் தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். சேலம் மாவட்டத் தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார்.
இதில், பெங்களுரூ இந்தியன் சோஷியல் டிரஸ்ட் சமூக சேவகர் டொமனிக் சாவியே, மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி ஆகியோர் பங்கேற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்க அலுவலகத்தைத் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் வெங்கட்ராமன், தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.