மாவட்ட கிரிக்கெட் போட்டி: பெருந்துறை சாகர் பள்ளி முதலிடம்
ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான 14 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி ஈரோடு, ஏஇடி பள்ளி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான 14 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி ஈரோடு, ஏஇடி பள்ளி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியில், 10 பள்ளிகள் கலந்துகொண்டன. இதில், சாகர் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பங்கேற்று விளையாடி, முதல் பரிசு, கோப்பையை வென்றனர். பள்ளி மாணவர் எல்.கே.தருண் சிறந்த ஆட்டக்காரர் விருதைப் பெற்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைவர் எஸ்.கே.ராமசாமி, தாளாளர் சி.சௌந்திரராசன், துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், முதல்வர் கல்யாணராமன், துணை முதல்வர் ராதாமனோகரன், கல்வி அதிகாரி ஜெகநாதன், நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், ஆசிரியர்கள் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.