ஈரோடு: திங்களூர் நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுமானப் பணி துவக்க விழா
திங்களூர் வேட்டையன்கிணறு பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டுமான பணிக்கான துவக்க விழா நடந்தது.
ஈரோடு மாவட்டம், திங்களூர் வேட்டையன்கிணறு பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டுமான பணிக்கான துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஈரோடு ரவுண்ட் டேபிள்-98 தலைவர் டாக்டர் வித்யா சரண் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு எஸ்பி சசி மோகன், டாக்டர்கள் மயிலேறு ரவிந்தரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில், தலைவர் விஷ்ணு பிரபாகர், ஊராட்சி தலைவர் சங்கீதா சக்திவேல், பள்ளியின் தலைமை ஆசிரியர் பானுரேகா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மோகன் சிங், ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள் இளங்கவி, பிரவீன், தங்கராஜ், செல்வராஜ், சிவகுமார், அஸ்வின், சவுமியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.