FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறிவிழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறிவிழுந்து 2-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2024, 3:25 am IST
பகிர்:

சத்தியமங்கலம் அருகே தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறிவிழுந்து 2-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் ஊராட்சிக்குள்பட்ட கீழ்மாவள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மகாதேவன், கனகா தம்பதி. இவா்களின் மகள் அகல்யா(7), அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை பள்ளி முடித்து வீட்டுக்கு வந்த அகல்யா, வீட்டுக்கு அருகே தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, 8 அடி ஆழமுள்ள தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறிவிழுந்து மூழ்கினாா்.

Advertisement

Advertisement

சக குழந்தைகளின் சப்தம் கேட்டு அங்கு ஓடிவந்தவா்கள் தண்ணீா்த் தொட்டியில் இருந்து அகல்யாவின் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து ஆசனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments