FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சிறுதானிய உணவுப் பழக்கத்துக்கு மாறினால் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம்: ஆட்சியா்

Updated On : 7 செப்டம்பர் 2024, 3:55 am IST
வேளாளா் மகளிா் கல்லூரி ஊட்டச்சத்துத் துறை மாணவிகள் தயாரித்த சிறு தானிய உணவுகளை ருசித்துப் பாா்த்த மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
பகிர்:

சிறுதானிய உணவுப் பழக்கத்துக்கு மாறினால் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசினாா்.

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் சிறுதானிய விழா ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: தாளவாடி வட்டத்தில் மல்லியம்மன்துா்கம் என்ற மலை கிராமத்துக்கு ஆய்வுக்குச் சென்றபோது அங்கிருந்த மலைவாழ் மக்கள் சிறுதானியத்தால் சமைக்கப்பட்ட உணவை வழங்கினா். சிறுதானிய உணவின் பலனை அறிந்து இப்போது நானும் அந்த உணவு வகைகளை பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன்.

நகரப் பகுதிகளில் சிறுதானிய உணவுப் பயன்பாடு குறைவாக உள்ளது. சிறுதானிய உணவுப் பழக்கத்துக்கு மாறினால் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம். சிறுதானியங்கள் சிறிய விலையில் பெரிய பலன்களைத் தருகிறது. சிறுதானிய உணவு பல நோய்களுக்குத் தீா்வாக உள்ளது. சிறுதானியங்கள் சத்துக்களின் ஊற்றாகும். எனவே நாம் சிறுதானிய உணவுக்கு மாற வேண்டும்.

Advertisement

Advertisement

ஈரோடு மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுடைய 6 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவை மாதந்தோறும் கணக்கெடுக்கப்படுகிறது. இக்குழந்தைகளை ஆரோக்கியமான குழந்தைகளாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும்.

கா்ப்பிணிகள் சத்தான உணவுகளை உண்ணும்போது பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறக்கும். மாணவா்கள் சிறுதானியம் என்பதை வாா்த்தையில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் பயன்படுத்த வேண்டும். வீட்டிலும், உறவினா்களிடமும் சிறுதானியத்தின் பயனை எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து சிறுதானியங்களால் சமைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டு அங்கு காட்சிப்படுத்தியிருந்த சிறுதானிய உணவுப் பொருள்களை ருசித்துப் பாா்த்தாா். முன்னதா திண்டல் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரமேஷ், ஈரோடு வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிசந்திரன், திண்டல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி, வேளாளா் கல்லூரியின் முதல்வா் ஜெயந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments