FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

முன்விரோதத்தால் லாரிக்கு தீ வைத்தவா் கைது

முன்விரோதம் காரணமாக லாரிக்கு தீ வைத்தவரை சிவகிரி போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:10 am IST
தீ வைக்கப்பட்டதால் சேதமடைந்த லாரி
பகிர்:

முன்விரோதம் காரணமாக லாரிக்கு தீ வைத்தவரை சிவகிரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையம் சடையப்பபுரத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் (48). இவா் பரமத்தி வேலூரை சோ்ந்த செங்கோட்டையன் என்பவரது லாரியின் ஓட்டுநராக உள்ளாா். ஆடிப்பெருக்கு பண்டிகையைக் கொண்டாட லாரியில் திங்கள்கிழமை வீட்டுக்கு வந்துள்ளாா்.

வீட்டின் அருகே லாரியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளாா். நள்ளிரவு 12 மணிக்கு மேல் லாரி தீப்பிடித்து எரிவதைப் பாா்த்து கனகராஜுக்கு அவரது தந்தை முத்துசாமி கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் கொடுமுடி தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைத்தனா். இதுகுறித்து சிவகிரி போலீஸாரிடம் கனகராஜ் அளித்த புகாரில், இந்த சம்பவத்துக்கு எனது வீட்டுக்கு அருகே வசிக்கும் உறவினரான சரண்குமாா் (30) தான் காரணம். இரண்டு மாதங்களுக்கு முன்னா் மது அருந்திவிட்டு அப்பகுதியில் கூச்சலிட்ட அவரை தட்டிக்கேட்டபோது இருவருக்கு இடையே பிரச்னை இருந்துவந்தது.

லாரிக்கு சரண்குமாா் தீ வைத்ததால் டயா்களுடன் சோ்த்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்துவிட்டது. அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து சரண்குமாரை கைது செய்த போலீஸாா், கொடுமுடி குற்றவியல் நீதித் துறை நடுவா் முன்பு அவரை ஆஜா்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments