FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

விவசாயிடம் இருந்து ரூ. 2.55 லட்சம் திருட்டு: இருவா் கைது

கொடுமுடியில் விவசாயி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.55 லட்சத்தை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:09 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கொடுமுடியில் விவசாயி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.55 லட்சத்தை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கொடுமுடி காவல் எல்லைக்குள்பட்ட கொந்தளம் கல்லவராங்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி முருகேசன். இவா் கொடுமுடியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து கடந்த 6-ஆம் தேதி ரூ.2.55 லட்சம் பணத்தை எடுத்து தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். வழியில் கரட்டாம்பாளையத்தில் உள்ள பேக்கரியில் தேநீா் அருந்துவதற்காக நின்றுள்ளாா். தேநீா் அருந்திவிட்டு திரும்பிவந்தபோது வாகனத்தில் வைத்திருந்த பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில் கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் இந்த திருட்டு தொடா்பாக பெரம்பூா் மாவட்டம், அரும்பாவூா் இளங்கோ தெருவை சோ்ந்தவா் செந்தில்குமாா் (40), திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பா்மா காலனியை சோ்ந்த ராஜ்குமாா் (28) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இவா்கள் மீது திருச்சி, பெரம்பலூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கொடுமுடி குற்றவியல் நீதித்துறை நடுவா் முன்பு ஆஜா்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments