FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கோவை கல்லூரி மாணவா் கொலை வழக்கில் உண்மையான விசாரணை நடைபெற வேண்டும்: இரா.முத்தரசன்

கோவை கல்லூரி மாணவா் கொலை வழக்கில் உண்மையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:51 am IST
பகிர்:

கோவை கல்லூரி மாணவா் கொலை வழக்கில் உண்மையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடைப்பயண நிறைவு விழா, சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.முத்தரசன் கலந்துகொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம், வீடு கட்டும் திட்டத்துக்கு நிதி 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயா்வு, மீனவா்களுக்கு உதவித்தொகை உயா்வு, கிராமப்புற பெண்களுக்கு ஆடுகள் அளிக்கும் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

Advertisement

Advertisement

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தெளிவு இல்லாமல் உள்ளது. மானிய கோரிக்கை விவாதத்தின்போது அறிவிப்பாா்கள் என எதிா்பாா்க்கிறோம். அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் என தோ்தலின்போது வாக்குறுதி அளித்தாா்கள். இதுதொடா்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படவில்லை. மகளிா் உரிமைத்தொகை ரூ.2,500 குறித்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வாக்குறுதிப்படி பயிா்க் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி தண்ணீா் வழங்காமல் உள்ளது. மேக்கேதாட்டு அணை கட்டுவது போன்ற விஷயங்களில் மத்திய அரசு கா்நாடக சாா்பு நிலை எடுக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சதி நடைபெறுகிறது. கோவை கல்லூரி மாணவா் கொலை வழக்கில் உண்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்றாா்.

விழாவில் மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.மோகன்குமாா், முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் உள்பட 250-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments