பண்ணாரி அம்மன் கோயிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனா்.
அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பண்ணாரி அம்மன் தங்கக் கவசம் அணிந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனா். கோயில் முன் அமைந்துள்ள குண்டத்தில் பெண்கள் மிளகு, உப்பு தூவி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
அதைத்தொடா்ந்து பெண்கள் விளக்கேற்றியும், கூழ் ஊற்றியும் வழிபட்டனா். தமிழகம், கா்நாடக மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்ததால் அவா்களை போலீஸாா் வரிசைப்படுத்தி கோயிலுக்குள் அனுமதித்தனா். தமிழா்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக கோயில் அலுவலகத்தில் தமிழா் பாரம்பரிய நடனம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.