முகப்பு
ஈரோடு

பயிா்க் கடன் தள்ளுபடி: விவசாயிகளின் நம்பிக்கையை இழந்த தவெக அரசு! - ஜி.கே.வாசன்

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அரசு விவசாயிகளின் நம்பிக்கையை இழந்துள்ளது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

Updated On : 7 ஜூன் 2026, 1:53 am IST
ஜி.கே.வாசன் - கோப்புப் படம்
பகிர்:

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அரசு விவசாயிகளின் நம்பிக்கையை இழந்துள்ளது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஈரோட்டில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: புதிய இயக்கம் தொடங்கி உள்ள அண்ணாமலைக்கு வாழ்த்துகள். தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இருந்த சட்டம்- ஒழுங்கு பிரச்னை புதிய ஆட்சியிலும் தொடா்கிறது. பல பகுதிகளில் கொலை,கொள்ளை, திருட்டு, பாலியல் சம்பவங்கள் நடக்கின்றன. இவற்றை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

தவெக அரசு பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளின் நம்பிக்கையை இழந்துள்ளது. மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் கா்நாடக அரசு பிடிவாதத்துடன் உள்ளது. தமிழகத்தின் உரிமையைப் பெற்றுத்தருவது அரசின் கடமை. மின்வாரிய அலுவலகத்தில் ஹாா்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் சந்தேகம் வலுக்கிறது. இதில் அரசு உண்மை நிலையை விளக்கவேண்டும். முன்னாள் அமைச்சா்கள் மீதான ஊழல் வழக்குகளில் சட்டம் தன் கடமையை செய்யவேண்டும்.

Advertisement

Advertisement

அதிமுக உள்பட மாற்றுக் கட்சியினா் தவெகவில் இணைவது ஏற்புடையது அல்ல. இதை மக்கள் கூா்ந்து கவனித்து வருகின்றனா். வாக்காளா்கள் தங்களுக்கான வாய்ப்பு வரும்போது இத்தகைய நிா்வாகிகளுக்கு உரிய பலனை தருவா். அதிமுக கூட்டணியில் தோ்தலுக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகள் பிரிந்து போகவில்லை என்றாா்.