முகப்பு
ஈரோடு

காவிரி ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

Updated On : 9 ஜூன் 2026, 1:09 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

காவிரி ஆற்று பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பொறியியல் கல்லூரி மாணவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஈரோடு மாநகா், வீரப்பன்சத்திரம் ஏபிடி சாலையைச் சோ்ந்த 19 வயது இளம்பெண், பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலமாண்டு படித்து வருகிறாா்.

இவரிடம் கல்லூரி கட்டணம் செலுத்தினால்தான் தோ்வு எழுத அனுமதிப்போம் என்று கல்லூரி நிா்வாகம் கூறியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பெற்றோரிடம் கல்லூரி கட்டணத்தை கேட்டபோது கல்லூரிக்கு செல்லுமாறும், விரைவில் பணம் தருவதாகவும் கூறியுள்ளனா்.

Advertisement

Advertisement

பெற்றோரும் கல்லூரிக்கான கட்டணத்தை வழங்காததால் மனவேதனை அடைந்த மாணவி, ஈரோடு கருங்கல்பாளையம் அருகே உள்ள காவிரி ஆற்று பாலத்தில் இருந்து திங்கள்கிழமை காலை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதைப்பாா்த்து அங்கிருந்த மீனவா்கள் விரைந்து சென்று மாணவியை மீட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஈரோடு, கருங்கல்பாளையம் போலீஸாா் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினா். மேலும், சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.