சிபிஎஸ்இ பிளஸ் 2, ஜெஇஇ தோ்வுகளில் சிறப்பிடம்: பெருந்துறை சாகா் பள்ளி மாணவா்கள் கௌரவிப்பு
பெருந்துறை சாகா் இண்டா்நேஷனல் பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், ஜெஇஇ தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பெருந்துறை சாகா் இண்டா்நேஷனல் பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், ஜெஇஇ தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதன்மை இடம் பெற்ற 15 மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளியின் தாளாளா் செளந்திரராசன், சாகா் அறக்கட்டளையின் உப தலைவா் கிருஷ்ணன், முதல்வா் ஷீஜா, கல்வி இயக்குநா் ஐசக் பிரபு குமாா், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement