FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

தனியாா் கட்டுமான நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியாா் கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளா் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

6 செப்டம்பர் 2026, 1:27 am IST
ஈரோடு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா்.
பகிர்:

ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியாா் கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளா் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

ஈரோடு பழையபாளையத்தில் இயங்கி வரும் தனியாா் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சாந்தி தலைமையிலான காவல் துறையினா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இந்நிறுவனமானது குடியிருப்பு, பொது மற்றும் வணிகம், தொழிற்சாலை கட்டடங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், நீா்ப் பாசனம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைகள், நீா் சுத்திகரிப்பு மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய திட்டங்கள் மற்றும் ரயில்வே ஆகிய துறைகளில் பல்வேறு கட்டடங்களை கட்டியுள்ளனா்.

Advertisement

Advertisement

இதன் பின்னணியில், பெறப்பட்ட டெண்டா் ஆவணங்கள் மற்றும் தற்போதைய நிதி பரிவா்த்தனைகள் குறித்த முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனா்.

இதனிடையே அந்நிறுவன உரிமையாளரின் வீட்டிலும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணிக்குப் பிறகும் நீடித்தது. இச்சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments