இரு பெண் குழந்தைகளுக்கான வைப்புத் தொகை பத்திரம் பெற்றவர்கள் கவனத்துக்கு...
நீலகிரி மாவட்டத்தில் 2 பெண் குழந்தைகளுக்கான வைப்புத்தொகைப் பத்திரம் பெற்றவர்கள் உடனடியாக சமூகநலத் துறை அலுவலகத்தை அணுகலாம்.
நீலகிரி மாவட்டத்தில் 2 பெண் குழந்தைகளுக்கான வைப்புத்தொகைப் பத்திரம் பெற்றவர்கள் உடனடியாக சமூகநலத் துறை அலுவலகத்தை அணுகலாம்.
இதுதொடர்பாக சமூகநலத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1997 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை வைப்புத்தொகைப் பத்திரம் பெற்றவர்களுக்கு தற்போது 18 வயது பூர்த்தியடைந்திருந்தால், முதிர்வு தொகை பெறலாம்.
அதற்கு பயனாளியின் வைப்புத்தொகைப் பத்திர நகலுடன் உதகையில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 0423- 244 3392 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.