சம்பள பாக்கியை வழங்கக் கோரி எஸ்டேட் தொழிலாளர்கள் போராட்டம்
பந்தலூரில் தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலூரில் தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலூர் பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட் நிர்வாகம் ஒன்று கடந்த இரண்டு மாதங்களாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. அதைக் கண்டித்தும், உடனே நிலுவைத் தொகையுடன் அனைத்து சம்பள பாக்கியையும் வழங்க வலியுறுத்தியும், எஸ்டேட் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தவிர, மேற்படி எஸ்டேட் வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.