எமரால்டுபஜாரில் முறையாக குப்பைகளை அள்ள கோரிக்கை
மஞ்சூர் அருகே முள்ளிகூர் ஊராட்சிக்கு உள்பட்ட எமரால்டு பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியை முறையாக பராமரிக்காததால்
மஞ்சூர் அருகே முள்ளிகூர் ஊராட்சிக்கு உள்பட்ட எமரால்டு பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியை முறையாக பராமரிக்காததால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ள்ளனர். முள்ளிகூர் ஊராட்சிக்குள்பட்ட எமரால்டு உள்ளிட்ட 5-க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இக்கிராம மக்கள் குப்பைகளைக் கொட்ட ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் சேகரமாகும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக அகற்றாததால் சுற்றுப்பகுதி முழுவதும் குப்பைகள் சிதறிக் கிடக்கின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, ஊராட்சி நிர்வாகம் துப்புரவு பணியாளர்களை அப்பகுதி அனுப்பி முறையாக குப்பைகளை அள்ள அதிகாரிகள் உத்தரவிட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.