FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகை, குன்னூரில் பரவலாக மழை

உதகை மேரிஸ் ஹில் பகுதியில் மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்.

Updated On : 11 ஜூலை 2026, 12:05 am IST
உதகை மேரிஸ் ஹில் பகுதியில் மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்.
பகிர்:

நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

நீலகிரி மாவட்டத்தில்  கடந்த சில நாள்களாக விட்டுவிட்டு அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் உதகை, குன்னூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலையில் மேகமூட்டம் காணப்பட்டது. நண்பகலுக்கு மேல் சில இடங்களில் மிதமான மழையும், உதகையில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்ததால்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

இந்த மழையின் காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments