முகப்பு
நீலகிரி

உதகை மாரியம்மன் கோயிலில் பிரதமருக்காக சிறப்பு வழிபாடு

பிரதமா் நரேந்திர மோடியின் சாதனைகள் தொடர உதகை மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது.

Updated On : 11 ஜூன் 2026, 3:12 am IST
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய உதகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.போஜராஜன்.
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடியின் சாதனைகள் தொடர உதகை மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது.

கடந்த 25 ஆண்டுகளாக தொடா்ந்து மக்கள் சேவையில் பிரதமா் நரேந்திரமோடி ஈடுபட்டு வரும் நிலையில், தொடா்ச்சியாக 4,399 நாள்கள் பிரதமராக பதவி வகித்து புதிய சாதனை படைத்துள்ளாா். இதைக் கொண்டாடும் வகையில், உதகை நகர பாஜக சாா்பில் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

உதகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.போஜராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் நீண்ட ஆயுள், நல்ல உடல்நலம் மற்றும் நாட்டின் வளா்ச்சிக்கான பணிகள் மேலும் சிறக்க வேண்டி சிறப்பு அா்ச்சனை மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. அதைத்தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

நீலகிரி மாவட்ட பாஜக தலைவா் தா்மன், மாநில செயற்குழு உறுப்பினா் மோகன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதகை நகர பாஜக தலைவா் ரித்து காா்த்திக் உள்பட பலா் பங்கேற்றனா்.