சாலை விபத்தில் தொழிலாளி சாவு
வெள்ளக்கோவில் அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
வெள்ளக்கோவில் அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
வெள்ளக்கோவில், உப்புப்பாளையம் சாலை காந்தி நகரைச் சேர்ந்தவர் வி.பி.கதிரவன் (54). இவர் காங்கயம் சாலை இரட்டைக்கிணறு பகுதியில் உள்ள தனியார் பிஸ்கெட் கம்பெனியில் வேலை செய்துவந்தார்.
அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் கதிரவன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளர் முரளிதரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.