FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அருள்புரத்தில் ஆசிரியர் தின விழா

அருள்புரம் ஜெயந்தி கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.  

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

அருள்புரம் ஜெயந்தி கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.  
அருள்புரத்தில் உள்ள ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஜெயந்தி பப்ளிக் பள்ளி, ஜெயந்தி கிட்ஸ் அகாதெமி, ஜெயந்தி கல்வியியல் கல்லூரி, ஜெயந்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஜெயந்தி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா, ஆசிரியர் தின விழா, நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
ஜெயந்தி அறக்கட்டளை மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மெட்ரிக். பள்ளி முதல்வர் எம்.கே.எஸ்.சுரேஷ்நாதன் வரவேற்றார். ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்ஆசி வழங்கினார். சித்தம்பலம் நவகிரகக்கோட்டை ஞானகுரு மன்றம் சார்பில் யாகவேள்வியும் பஜனை கச்சேரியும் நடைபெற்றன. 
அன்னதானம் வழங்கப்பட்டது. ஜெயந்தி பப்ளிக் பள்ளி முதல்வர் எம்.சிலம்புசெல்வன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments