முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே காற்றாலை ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு

வெள்ளக்கோவில் அருகே காற்றாலை ஏற்றி வந்த மூன்று லாரிகளை விவசாயிகள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.

Updated On : 4 ஆகஸ்ட் 2024, 2:50 am IST
விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே காற்றாலை ஏற்றி வந்த மூன்று லாரிகளை விவசாயிகள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.

வெள்ளக்கோவில் மூத்தநாயக்கன்வலசு பகுதியில் தனியாா் நிறுவனம் சாா்பில் துணை மின் நிலையம், காற்றாலைகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விவசாய நிலங்களில் அவற்றை அமைக்கக் கூடாதென விவசாயிகள், பொதுமக்கள் கடந்த 6 மாதங்களாக எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், காற்றாலைகளின் காற்றாடிகள், உபகரணங்களை ஏற்றிக் கொண்டு மூன்று பெரிய லாரிகள் அப்பகுதிக்கு சனிக்கிழமை வந்தன.

Advertisement

Advertisement

அப்போது, குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் வழியில் மரத்தடி கோயிலில் இருந்த ஒரு சிலையை அகற்றியுள்ளனா். மேலும் லாரிகள் செல்ல இடையூறாக இருந்த சில மரங்கள், வேலிகளை வெட்டியுள்ளனா்.

இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் லாரிகளை சிறைபிடித்தனா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி லாரிகளை மீட்டு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் சில மணிநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments