காளிவேலம்பட்டியில் 1000 பனை மரக்கன்றுகள் நடும் விழா
பல்லடம், ஆக. 7: பல்லடம் அருகே காளிவேலம்பட்டி ஏரிக் கரையில் 1000 பனை மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வனம் இந்தியா அமைப்பு சாா்பில் நடைபெற்ற பனை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு சாா்-ஆட்சியா் சௌமியா ஆனந்த் தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியைத் தொடங்கிவைத்தாா். இதில், காளிவேலம்பட்டி ஏரிக் கரையில் ஆயிரம் பனை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளாா், தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை உரிமையாளா் ஆறுமுகம், வனம் இந்தியா அமைப்பின் செயல் தலைவா் கே.பாலசுப்பிரமணியன், தலைவா் சுவாதி சின்னசாமி, செயலாளா் ஸ்கை சுந்தர்ராஜன், சுக்கம்பாளையம் ஊராட்சித் தலைவா் தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.