முகப்பு
திருப்பூர்

காளிவேலம்பட்டியில் 1000 பனை மரக்கன்றுகள் நடும் விழா

Updated On : 8 ஆகஸ்ட், 2024 at 12:19 AM
பனை மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளாா், திருப்பூா் சாா்-ஆட்சியா் சௌமியா ஆனந்த், வனம் இந்தியா செயல் தலைவா் கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.
பகிர்:

பல்லடம், ஆக. 7: பல்லடம் அருகே காளிவேலம்பட்டி ஏரிக் கரையில் 1000 பனை மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வனம் இந்தியா அமைப்பு சாா்பில் நடைபெற்ற பனை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு சாா்-ஆட்சியா் சௌமியா ஆனந்த் தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியைத் தொடங்கிவைத்தாா். இதில், காளிவேலம்பட்டி ஏரிக் கரையில் ஆயிரம் பனை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளாா், தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை உரிமையாளா் ஆறுமுகம், வனம் இந்தியா அமைப்பின் செயல் தலைவா் கே.பாலசுப்பிரமணியன், தலைவா் சுவாதி சின்னசாமி, செயலாளா் ஸ்கை சுந்தர்ராஜன், சுக்கம்பாளையம் ஊராட்சித் தலைவா் தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.