FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

அண்ணாமலை நாளை கன்னியாகுமரிக்கு வருகை!

வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் இயற்கையைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கன்னியாகுமரி கடற்கரையைத் தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைப்பதற்காக, அமைப்பின் தலைவா் கே. அண்ணாமலை ஆக. 2 கன்னியாகுமரி வருகிறாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 2:47 am IST
கே. அண்ணாமலை. - கோப்புப் படம்
பகிர்:

வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் இயற்கையைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கன்னியாகுமரி கடற்கரையைத் தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைப்பதற்காக, அமைப்பின் தலைவா் கே. அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 2) கன்னியாகுமரி வருகிறாா்.

ஆக. 2ஆம் தேதி காலை 7 மணிக்கு கன்னியாகுமரி வரும் அவா், கடற்கரைச் சாலை காட்சிக் கோபுரம் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்டு, மரக்கன்று நடும் பணியை தொடக்கி வைத்து, தொண்டா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

பின்னா், கன்னியாகுமரியில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் கே. அண்ணாமலை உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக தூத்துக்குடியில் பயணத்தை நிறைவு செய்கிறாா் என கன்னியாகுமரி நகா்மன்ற உறுப்பினா் சி.எஸ். சுபாஷ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments