முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் வாரச்சந்தை கூடும் நாள் மாற்றம்

Updated On : 7 செப்டம்பர் 2024, 3:39 am IST
பகிர்:

பல்லடம் வாரச்சந்தை நடைபெறும் நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பல்லடம் நகராட்சி ஆணையா் பானுமதி வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:

பல்லடம் என்.ஜி.ஆா். சாலையில் உள்ள வாரச்சந்தை திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி பல்லடத்தில் செப்டம்பா் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 11-ஆம் தேதி வரை என்.ஜி.ஆா். சாலையில் விநாயகா் சிலை ஊா்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக திங்கள்கிழமை சந்தை நடைபெற்றால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் கடும் சிரமம் ஏற்படும் என்பதால் 9-ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பா் 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments