FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தாய், 5 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 12:46 am IST
பகிர்:

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் தாய், 5 வயது பெண் குழந்தை உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகேயுள்ள பல்லகவுண்டன்பாளையம் சங்கிலித் தோட்டத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (35). இவரது மனைவி சமீனா (26). இவா்களது மகள் மேகலா (5).

இந்நிலையில், சமீனா கா்ப்பமாக இருந்த நிலையில் பரிசோதனைக்காக பெருமாநல்லூா் அரசு மருத்துமனைக்கு 3 பேரும் வந்துள்ளனா். பரிசோதனை முடிந்த பின் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனா்.

Advertisement

Advertisement

வலசுப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த காா் பெரியசாமி வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சமீனா, மேகலா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த பெரியசாமியை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரான சேலம், கெங்கவல்லியைச் சோ்ந்த பழனிசாமி (50) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments