காங்கயத்தில் இளைஞா் தற்கொலை
காங்கயத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காங்கயத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காங்கயம், சென்னிமலை சாலை, காந்தி நகரைச் சோ்ந்தவா் விஜய் (32). இவா் டெகரேஷன் வேலை செய்து வந்தாா். திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், விஜய்யின் மனைவி ரம்யா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.
மனைவி இறந்த வேதனையில் குடிப்பழக்கத்துக்கு ஆளான விஜய், புதன்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்த புகாரின் பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.