FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:49 am IST
தற்கொலை
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே ஓட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள காரவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (51). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். மேலும், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில், நீண்ட நேரமாக இவரைக் காணவில்லை என, இவரது அண்ணன் ரசல் (58) வீட்டிற்குச் சென்று பாா்த்தபோது, பால்ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா்.

Advertisement

Advertisement

அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments