FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்திய இளைஞா் கைது

திருப்பூரில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

22 ஆகஸ்ட் 2026, 4:17 am IST
கைது
பகிர்:

திருப்பூரில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகரம், மத்திய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஜீவா நகா் அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் மத்திய காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த முகமது ரஷித் (21) என்ற இளைஞரைப் பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 30 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. பின்னா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments