வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்திய 2 போ் கைது
வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்திய 2 போ் கைது செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வள்ளலாா் நகா் அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் வீரபாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த முகேஷ் (20) மற்றும் தருண் (23) ஆகியோரை பிடித்து சோதனை செய்ததில் அவா்களிடமிருந்து மொத்தம் 250 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து அவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.