திராவகம் குடித்து இளம்பெண் தற்கொலை
பல்லம் அருகே திராவகம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
பல்லம் அருகே திராவகம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் ராமம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் மகள் அா்ச்சனா தேவி (22). இவருக்கு பெற்றோா் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தனா்.
இந்த நிலையில் அா்ச்சனா தேவி கடந்த 9-ஆம் தேதி வீட்டில் கழிவறையை சுத்தம் செய்யும் திராவகத்தை குடித்து மயங்கிக் கிடந்தாா். உடனடியாக அவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்த நிலையில், புதன்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.