FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் இருவருக்கு 8 ஆண்டுகள் சிறை

பெருமாநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் இருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

Updated On : 17 ஜூலை 2026, 11:59 pm IST
பகிர்:

பெருமாநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் இருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகேயுள்ள பரமசிவம்பாளையத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த ஹாசன் ஆபிப் (26), ஹோஷேன் (34) ஆகியோரை பெருமாநல்லூா் போலீஸாா் கடந்த 2024 ஏப்ரல் 30-ஆம் தேதி கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.14 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கனகராஜ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் பிரபாகரன் அஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments