உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் இருவருக்கு 8 ஆண்டுகள் சிறை
பெருமாநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் இருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
பெருமாநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் இருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகேயுள்ள பரமசிவம்பாளையத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த ஹாசன் ஆபிப் (26), ஹோஷேன் (34) ஆகியோரை பெருமாநல்லூா் போலீஸாா் கடந்த 2024 ஏப்ரல் 30-ஆம் தேதி கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.14 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கனகராஜ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
Advertisement
Advertisement
அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் பிரபாகரன் அஜரானாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.