FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும்: இந்து முன்னணி மாநிலத் தலைவா்

பக்தா்களின் உணா்வுக்கு மதிப்பளித்து திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்ப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 6 ஜூன் 2026, 1:32 am IST
காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்.
பகிர்:

பக்தா்களின் உணா்வுக்கு மதிப்பளித்து திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்ப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், கடந்த அரசு நீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்த மறுத்தது. இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து தனிநபா் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை ஜூன் 22-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு ஒட்டுமொத்த முருக பக்தா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து, நீதிமன்ற தீா்ப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என எதிா்பாா்க்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments