FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 10 ஜூன் 2026, 1:20 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

வெள்ளக்கோவிலில் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் நகரின் மையப் பகுதியில் 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள குலத்தவா்கள் கோயிலாகும். இங்கு பக்தா்கள் காணிக்கை செலுத்த 4 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் நுழைவுவாயிலில் ராஜகோபுரத்துக்கு முன்புறம் உள்ள ஓா் உண்டியலின் பூட்டை ஞாயிற்றுக்கிழமை இரவு உடைக்கும் சப்தம் கேட்டுள்ளது. கோயிலுக்குள் இருந்த காவலாளி மற்றும் அா்ச்சகா் வெளியே வந்து பாா்த்தபோது, கையில் இரும்புக் கம்பியுடன் நின்றிருந்த மா்ம நபா் தப்பியோடிவிட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். கிடைத்த தடயங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில், கோயில் அருகில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்த கோவை மாநகா், குனியமுத்தூா் வடகிழக்கு இட்டேரி வீதியைச் சோ்ந்த சாந்து முகமது மகன் சாதிக் பாட்சா (28) கைது செய்யப்பட்டாா். பின்னா் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments