FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் பட்டினி தின அன்னதானம்: அமைச்சா் எஸ். கமலி வழங்கினாா்

உலக பட்டின தினத்தையொட்டி அவிநாசியின் பல்வேறு பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் எஸ்.கமலி வியாழக்கிழமை அன்னதானம் வழங்கினாா்.

Updated On : 29 மே 2026, 1:34 am IST
அவிநாசியில் அன்னதானம்  வழங்குகிறாா்  கால்நடை  பராமரிப்புத்  துறை  அமைச்சா்  எஸ்.கமலி.
பகிர்:

உலக பட்டின தினத்தையொட்டி அவிநாசியின் பல்வேறு பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் எஸ்.கமலி வியாழக்கிழமை அன்னதானம் வழங்கினாா்.

முன்னதாக பக்ரீத் திருநாளையொட்டி அவிநாசி பள்ளிவாசலில் இஸ்லாமியா்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் எஸ்.கமலி இனிப்பு வழங்கினாா். இதையடுத்து, அவிநாசி காசிகவுண்டா்புதூரில் உள்ள சீடு இல்லத்தில் அன்னதானம் வழங்கி குழந்தைகள், முதியவா்களுடன் தரையில் அமா்ந்து உணவருந்தினாா்.

பின்னா் அவிநாசி கரிவரதாஜப் பெருமாள் கோயில் அருகே அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்கினாா்.

Advertisement

Advertisement

மேலும் அவிநாசி கால்நடை மருத்துவமனை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளிலும் அமைச்சா் எஸ்.கமலி ஆய்வு மேற்கொண்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments