FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகள் மூலம் வெங்காயம் சிறப்பு விற்பனை இன்று தொடக்கம்

திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை நியாய விலைக் கடைகள் மூலம் வெங்காயம் வியாழக்கிழமை (செப்.3) முதல் விற்பனை செய்யப்படுகிறது.

47 வினாடிகள் முன்பு
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை நியாய விலைக் கடைகள் மூலம் வெங்காயம் வியாழக்கிழமை (செப்.3) முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபு தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசின் உத்தரவின்படி, வெங்காயத்தின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூா் மாவட்டத்தில் 25 மெட்ரிக் டன் வெங்காயம், கூட்டுறவுத் துறை நடத்தும் 369 நகா்ப்புற நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

இந்த சிறப்பு விற்பனை செப்டம்பா் 3-ஆம் தேதிமுதல் தொடங்குகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்படும். பொதுமக்களின் நலன் கருதி செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments