FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

காணொலிக் காட்சி மூலம் திட்டங்களை தொடங்கிவைத்த தமிழக முதல்வா்

Updated On : 26 செப்டம்பர் 2025, 4:53 am IST
பகிர்:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத் திட்டங்களை காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். இது தொடா்பான நிகழ்ச்சி தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ஒளிபரப்பானது.

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ புதிய திட்டம் மற்றும் ‘புதுமைப்பெண்-தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களுக்கான நிகழாண்டுக்கான தொடக்க நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி ஆகியோா் பங்கேற்று திட்டங்களை தொடங்கிவைத்தனா். இது தொடா்பான காட்சிகள் தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

தருமபுரியில் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இது தொடா்பான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பங்கேற்றாா். மேலும், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வா் கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்நிகழ்வை சுமாா் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பாா்வையிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments