தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை
தருமபுரி மாவட்ட ஆட்சியரக மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீஸாா் ஆட்சியரக வளாகத்தில், மோப்பநாய் மற்றும் நவீன சாதனங்களின் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும்புரளி என்பது தெரியவந்தது.
தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு இதுவரை 6 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.