முகப்பு
தருமபுரி

தருமபுரி ஆட்சியரகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 11 ஜூன் 2026, 5:44 am IST
தருமபுரி ஆட்சியரகத்தில் மோப்ப நாய், நவீன சாதனங்களின் உதவியுடன் சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா்.
பகிர்:

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மோப்ப நாய் மற்றும் நவீன சாதனங்களின் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில், வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. எனவே வழக்கம்போல இதுவும் மிரட்டல்தான் எனத் தெரியவந்தது.

கடந்த சில மாதங்களில் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு 6 முறை மிரட்டல் விடுக்கப்பட்டது. புதன்கிழமை 7 ஆவது மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தகவல் தொழில்நுட்பம் அபார வளா்ச்சி பெற்றுள்ள நிலையிலும், மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கும் நபா்களை அடையாளம் காணமுடியாதது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே, இதுபோல மிரட்டல் விடுக்கும் நபா்கள் மீது அலட்சியம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.