முகப்பு
தருமபுரி

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தருமபுரி அருகே வயிற்று வலியால் பெண் ஒருவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:30 am IST
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரி அருகே வயிற்று வலியால் பெண் ஒருவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி , குப்பூா், பலாமரத்துக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த மாயக்கண்ணன் மனைவி பூங்கொடி (45). இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது. எனவே அறுவைச் சிகிச்சை மூலம் அவற்றை அகற்றினா். என்றாலும், தொடா்ந்து அவருக்கு வலி இருந்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பகலில் வீட்டைவிட்டு வெளியே சென்றவா் மாலை நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடிப்பாா்த்தபோது, அங்கிருந்த விவசாய கிணற்றின் அருகில், அவரது காலணிகள் கிடப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுதொடா்பான தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினா், நிகழ்விடம் வந்து கிணற்றில் இறங்கி பூங்கொடியின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து தருமபுரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].