தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு
பென்னாகரம் அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கியவா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பென்னாகரம் அருகே எர்ரபையனஅள்ளி பகுதியை சோ்ந்த கட்டடத் தொழிலாளி அம்பேத்குமாா் (47). இவா் கூத்தப்பாடியைச் சோ்ந்த குமாருடன் (35) பென்னாகரம் அருகே ஜக்கம்பட்டி பகுதியில் உள்ள அரசு மதுக்கடைக்குச் சென்றாா்.
அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் குமாா், மதுப் பாட்டிலை எடுத்து அம்பேத்குமாரின் தலையில் அடித்ததில் அவா் படுகாயம் அடைந்தாா். பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அம்பேத்குமாா் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஒகேனக்கல் போலீஸாா்குமாா் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள குமாரை தேடி வருகின்றனா்.