சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெருமாள். 
தருமபுரி

பாப்பாரப்பட்டி தேர் விபத்து: சிகிச்சை பெற்று வந்த நால்வரில் ஒருவர் உயிரிழப்பு

பாப்பாரப்பட்டி காளியம்மன் திருவிழா தேரோட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நால்வரில், சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெருமாள் உயிரிழந்துள்ளார்.

DIN

பென்னாகரம்: பாப்பாரப்பட்டி காளியம்மன் திருவிழா தேரோட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நால்வரில், சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெருமாள் உயிரிழந்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதே அள்ளி பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவின் போது நடந்த தேரோட்டத்தின்போது சக்கரத்தின் அச்சாணி முறிவு ஏற்பட்டு தேர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோகரன் (57), பிலப்ப நாயக்கன் அள்ளி பகுதியைச் சேர்ந்த சரவணன் (50) ஆகிய இருவர் உயிரிழந்தும், படுகாயமடைந்த மாதே அள்ளி பகுதியைச் சேர்ந்த மாதேஷ், பெருமாள், பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன்,மாதேஷ் ஆகிய நால்வரும் அவசர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 என நால்வருக்கு ரூ.2,00,000 காசோலைகளை மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கி, ஆறுதல் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக குப்பன் மகன் பெருமாள் (53) சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது தேர் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நால்வரில், ஒருவர் உயிரிழந்த நிலையில், அரசின் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT